கோவை அரசு மருத்துவமனையில் செருப்பை திருடும் போது கையும் களவுமாக பிடிபட்ட நபர் போலீசில் ஒப்படைப்பு

கோவை : அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையம் அருகே செருப்பை திருட முயன்ற நபரை மருத்துவமனையின் பெண் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

கோவை : அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையம் அருகே செருப்பை திருட முயன்ற நபரை மருத்துவமனையின் பெண் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். 

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநோயாளிகளும், 1,600க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் அடிக்கடி செல்போன் மற்றும் செருப்புகள் திருட்டுப் போவது அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவமனையின் தனியார் பாதுகாவலர்கள் சந்தேகப்படும் நபர்களைப் பிடித்து காவல் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை முழு உடல் பரிசோதனை மையத்தில், நோயாளி ஒருவரின் செருப்பை சந்தேகத்திற்குரிய நபர் திருடுகையில், கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். இதையடுத்து செருப்பை திருடிய அந்த நபரை மருத்துவமனையின் தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண் ஒருவர் மடக்கிப் பிடித்தார். பின்னர் மருத்துவமனையில் பாதுகாவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்தவர்கள் அந்நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...