டில்லி ஸ்டார் ஹோட்டல் தீ விபத்தில் திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளர்கள் பலி

திருப்பூர் : திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள், டில்லி ஸ்டார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள், டில்லி ஸ்டார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், கருமத்தான்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் நந்தகுமார் (32). தற்போது திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் பெருமாநல்லுரில் வசித்து வருகிறார். மேலும், இவர் பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள ஈஸ்ட் மேன் பனியன் தொழிற்சாலையில் மூத்த மெரிஸ்சென்டேசராக பணிபுரிந்து வருகிறார். 

திருப்பூர் மாவட்டம், ராக்கிய பாளையம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் மகன் அரவிந்த் வயது (39). இவரும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள ஈஸ்ட் மேன் பனியன் தொழிற்சாலையில் மெரிஸ்சென்டேசர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். 

கடந்த 10ம் தேதி இரவில், நந்தகுமார் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும் பணி நிமித்தமாகக் டெல்லி சென்றனர். இதையடுத்து, இருவரும் அங்குள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கி பணி செய்துள்ளனர். இதற்கிடையில், யாரும் எதிர்பாராத விதமாக, இன்று டில்லி ஸ்டார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்களும் பலியாகினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...