கோவை பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை, பணம் திருட்டு : கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை : பாப்பநாயக்கன் பாளையம், பட்டத்தரசி அம்மன் கோயிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் மற்றும் ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற சம்பவம் குறித்து பந்தய சாலை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : பாப்பநாயக்கன் பாளையம், பட்டத்தரசி அம்மன் கோயிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் மற்றும் ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற சம்பவம் குறித்து பந்தய சாலை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம், பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை இந்த கோவிலை திறக்க வந்த ஊழியர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. 



மேலும், கோவிலுக்குள் இருந்த ஐம்பொன் சிலையும் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவில் ஊழியர்கள் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த பந்தய சாலைக் குற்றப்பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகள் குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். 



அதனைத் தொடர்ந்து, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மர்ம கும்பலைப் பிடிக்க கோவை மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க, போலீசார் விரைந்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...