நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற போது, பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற போது, பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் மழைக்காலங்களில் அடிக்கடி பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகைப் பாதுகாக்கவும், கடந்த 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும் அனுமதி பெறாமல், வனத்துறை, புவியியல் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முறையான அனுமதி பெற வேண்டும்.
மேலும், இந்தக் கட்டிடங்கள் 7 மீட்டருக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சிலர் விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளனர். அதன்படி, கடந்த 15 ஆண்டுகளில் 1,300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று தொடங்கியது. அப்போது, உதகை மெயின் பஜார் பகுதியில் இருந்த சில குடியிருப்புகளுக்கும் சீல் வைப்பதாக அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக, நகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், சில குடியிருப்புகளின் பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டு, சீல் வைக்கும் பணியை தொடர்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் மழைக்காலங்களில் அடிக்கடி பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகைப் பாதுகாக்கவும், கடந்த 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும் அனுமதி பெறாமல், வனத்துறை, புவியியல் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முறையான அனுமதி பெற வேண்டும்.
மேலும், இந்தக் கட்டிடங்கள் 7 மீட்டருக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சிலர் விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளனர். அதன்படி, கடந்த 15 ஆண்டுகளில் 1,300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று தொடங்கியது. அப்போது, உதகை மெயின் பஜார் பகுதியில் இருந்த சில குடியிருப்புகளுக்கும் சீல் வைப்பதாக அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக, நகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், சில குடியிருப்புகளின் பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டு, சீல் வைக்கும் பணியை தொடர்ந்தனர்.