கோவையில் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்., காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்

கோவை : கோவையில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


கோவை : கோவை : கோவையில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது :- கோவையில் வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக, 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 



வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் முதல் 22 டிகிரி செல்சியசாகவும், காலைநேர காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 சதவிகிதமாகவும், மாலைநேர காற்றின் ஈரப்பதம் 40 சதவிகிதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 6 கி.மீ. முதல் 8 கி.மீ. அளவுக்கு பெரும்பாலும் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

மேலும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மழை பெய்த பிறகு, தொடர்ந்து வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து பயிர்களுக்கும் மண்ணின் ஈரத்தை பொறுத்து உடன் நீர்பாசனம் செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...