மேட்டுப்பாளையம் தென்திருமலை கோவிலில் தங்க தேரோட்ட திருவிழா

கோவை : மேட்டுப்பாளையம் தென்திருமலை கோவிலில் நடைபெற்ற தங்க தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை : மேட்டுப்பாளையம் தென்திருமலை கோவிலில் நடைபெற்ற தங்க தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருமலை வேங்கடேஸ்வர ஸ்ரீ வாரி ஆலயத்தில் இன்று ரத சப்தமி மற்றும் சூர்ய ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்கள் மற்றும் வைபவங்கள் இந்த தென்திருமலை கோவிலிலும் நேரம் மற்றும் நாள் தவறாமல், திருப்பதி கோவில் அர்ச்சகர்களால் நடத்தப்படுவது வழக்கம். 



அதன்படி, இன்று அதிகாலை முதல் கோவில் வளாகத்தில் சூர்ய பிரபை வாகனம், சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், அனுமந்த வாகனம் மூலம் வேங்கடேஸ்வர சுவாமி திருவீதி உலா அழைத்து வரப்பட்டார். இதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தங்க தேரோட்ட நிகழ்ச்சி, மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்றது. தங்க தேர் பவனியில் வேங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இதனைத் தொடர்ந்து, கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தங்க தேர் இறுதியில் நிலையினை அடைந்தது. இதில், கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், முத்துபந்தல் வாகனம் மற்றும் சந்திர பிரபை வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...