நீலகிரி : பந்தலுார் பாட்டவயல் பகுதியில் பிடிக்கப்பட்ட சிறுத்தையை, விரைவில் வண்டலுார் மிருக காட்சி சாலைக்கு கொண்டு விட திட்டமிடப்பட்டுள்ளது.
நீலகிரி : பந்தலுார் பாட்டவயல் பகுதியில் பிடிக்கப்பட்ட சிறுத்தையை, விரைவில் வண்டலுார் மிருக காட்சி சாலைக்கு கொண்டு விட திட்டமிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதியில் ஒருவரது வீட்டிற்குள் கடந்த 5ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து, பாதுகாப்பாக பிடித்தனர். இந்நிலையில், பிடிபட்ட சிறுத்தையின் முதுகு, கால்பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வன அலுவலர் ராகுல் உத்தரவுபடி, கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், தினசரி மூன்று நேரமும் டாக்டர்கள் பரத்ஜோதி, நந்தினி ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும், காயங்கள் குணமானவுடன், அதனை வண்டலுார் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடலுார் வன அலுவலர் ராகுல் கூறுகையில், ''பிடிக்கப்பட்ட சிறுத்தையின் காயத்திற்கு, தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கு பதில், வண்டலுார் மிருககாட்சி சாலைக்கு கொண்டு செல்ல உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உத்தரவு வந்தவுடன், வண்டலுார் கொண்டு செல்லப்படும்,'' என்றார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதியில் ஒருவரது வீட்டிற்குள் கடந்த 5ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து, பாதுகாப்பாக பிடித்தனர். இந்நிலையில், பிடிபட்ட சிறுத்தையின் முதுகு, கால்பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வன அலுவலர் ராகுல் உத்தரவுபடி, கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், தினசரி மூன்று நேரமும் டாக்டர்கள் பரத்ஜோதி, நந்தினி ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும், காயங்கள் குணமானவுடன், அதனை வண்டலுார் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடலுார் வன அலுவலர் ராகுல் கூறுகையில், ''பிடிக்கப்பட்ட சிறுத்தையின் காயத்திற்கு, தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கு பதில், வண்டலுார் மிருககாட்சி சாலைக்கு கொண்டு செல்ல உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உத்தரவு வந்தவுடன், வண்டலுார் கொண்டு செல்லப்படும்,'' என்றார்.