குனியமுத்தூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள பாரதிநகரில் இருக்கும் கிணற்றில் இருந்து இன்று அதிகாலை துர்நாற்றம் வீ சி வந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அந்தப் பகுதி மக்கள் துர்நாற்றம் வீசுவது தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் பார்த்தபோது, அங்கு சடலம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. இந்த சடலம் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் எனக் கண்டறியப்பட்டது.

பின்னர், இந்த சடலத்தை மீட்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு குனியமுத்தூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த இளைஞரின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த அடையாளம் தெரியாத இளைஞரின் மர்ம மரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர் குனியமுத்தூரை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் அசாருதீன் என்பதும், இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அதேபோல, கடந்த சில தினங்களாக மன நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அசாருதீன், கடந்த சில நாட்களாக காணாமல் போனதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இளைஞரின் உடலை மீட்ட போலீசார், இவரது மர்ம மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...