வெள்ளிங்கிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி : பாதுகாப்பு கருதி இரவில் மலையில் தங்க தடை

கோவை : கோவை வெள்ளிங்கிரி மலையேறப் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பு கருதி இரவில் தங்க தடை அறிவித்துள்ளது.

கோவை : கோவை வெள்ளிங்கிரி மலையேறப் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பு கருதி இரவில் தங்க தடை அறிவித்துள்ளது. 

சுமார் 5.5 கி.மீ. தூரம் செல்லும் இதன் மலைப்பாதை மிகவும் கரடுமுரடாக இருக்கும். ஆகையால், இந்த மலைப் பாதையில் பக்தர்கள் செல்ல ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமிருப்பதால், இரவில் மலையிலே தங்குவது பாதுகாப்பளிக்காது. எனவே, காலை வேளை மலையேறத் தொடங்கி இருட்டுவதற்குள் திரும்பிவிட வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, முள்ளங்காடு முதல் வெள்ளிங்கி ஆண்டவர் கோயில் வரையுள்ள சாலையில் இரவு நேரத்தில் யானை நடமாட்டம் உள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் மாலை 6 மணிக்கு மேல் வருவதைப் பக்தர்கள் தவிர்க்க வேண்டும், என்றார். 

மேலும், மலையேறும் பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கூடாது. அதிகாலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு, இரவிற்குள் கீழே திரும்ப வேண்டும் போன்றவற்றை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...