கோவை : ஆலந்துறை அருகே உள்ள போளுவாம்பட்டி பகுதியில் தந்தையே மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ஆலந்துறை அருகே உள்ள போளுவாம்பட்டி பகுதியில் தந்தையே மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே உள்ள போளுவாம்பட்டி பகுதியில் உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் ராமலிங்கம் (35). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக பணி செய்து வருகிறார்.
இவருக்கும் இவரது மனைவி சுதா (எ) லட்சுமிக்கும் திருமணம் ஆகி சுமார் 13 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை தற்போது ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதேபோல, சிறுமியின் தாயார் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். ஆகையால், சிறுமி தனது பாட்டி வீட்டிலும், அவரது வீட்டிலும் பகல், இரவு என மாறி சூழலுக்கு தகுந்தாற்போல வசித்து வந்தார்.
மேலும், லோடிங் வேலை சரிவர இல்லாததால், தந்தை வீட்டில் இருந்திருக்கிறார். அப்பொழுது உணவருந்த வந்த சிறுமியை பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.
தொடர்ந்து, இதைப் போலவே பாலியல் வன்கொடுமை செய்து வந்த நிலையில், தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, எழுந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தை ராமலிங்கத்தின் மீது பேரூர் அனைத்து மகளிர் போலீசார், போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தந்தையே பிள்ளையின் மீது பாலியல் வன்கொடுமை செய்தது அனைவர் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.