திருப்பூர் : கொடுவாய் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் : கொடுவாய் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கொடுவாய் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதனை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதால், உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் சார்பில் போலீசாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, கொடுவாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் போலீசார் பாரபட்சமின்றி சோதனை நடத்த வேண்டும்.
மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கொடுவாய் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதனை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதால், உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் சார்பில் போலீசாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, கொடுவாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் போலீசார் பாரபட்சமின்றி சோதனை நடத்த வேண்டும்.
மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.