கோவை : காடுகளை உருவாக்கும் காட்டு யானைகளை காப்பாற்ற வலியுறுத்தி, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : காடுகளை உருவாக்கும் காட்டு யானைகளை காப்பாற்ற வலியுறுத்தி, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு மலைத்தொடர்ச்சியில், யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பழங்குடியின மற்றும் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காடுகளை உருவாக்கும் காட்டு யானைகள் காப்பாற்றப்பட வேண்டும். அதன் வசிப்பிடங்களில் விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னத்தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட சின்னத்தம்பி யானையை மீண்டும் அதன் வாழ்விடத்திலேயே விட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.