பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை தொடக்கம் : இணைப்பு பெற பொதுமக்கள் ஆர்வம்

கோவை : பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க முன் வந்துள்ளது.

கோவை : பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க முன் வந்துள்ளது. 



இன்றைய சூழலில் ஆன்ட்ராய்டு செல்போன் இல்லாதவர்கள் வெகு குறைவு. இணையதள இணைப்பு மூலம் செல்போனில் இருந்த பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவதும், நெட் பேங்கிங் முதல் உணவு வகைகள் ஆர்டர் செய்து கொள்வது வரை அனைத்து தேவைகளையும் அலைபேசி மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர். 

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்றார் போல, வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை வசூலித்து வந்தது. இதற்கிடையே, ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இலவச சிம் கார்டுடன், இலவச இணைய சேவை அளித்தால் ஏராளமானோர் ஜியோ இணைப்புக்கு மாறினர். இதனைக் கண்ட போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ஏராளமான சலுகைகளோடு சந்தையில் போட்டி போட்டு கொண்டு வாடிக்கைளர்களுக்கு சலுகைகளை வழங்கியது. 



இந்நிலையிலும் கூட, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3ஜி சேவை மட்டுமே வழங்கி வந்தது. இதன் கட்டணங்கள் தனியார் நிறுவனங்களை விட குறைவாக இருந்ததாலும், பல்வேறு சிறப்பு சலுகைகள் காரணமாக வாடிக்கையாளர்கள் இதனை விரும்பி வைத்திருந்தனர். வெகு நாட்ளாக பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க முன் வந்துள்ளது. அதனுடைய வாடிக்கையாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, தற்போது பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் தங்களது அடையாள அட்டையைக் கொடுத்து வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டை இலவசமாகப் பெற்று வருகின்றனர். மேலும், புதிதாக பெற விரும்புவார்கள் ரூ.80 கொடுத்துப் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்,.க்கு மாற ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தனியார் நிறுவனங்கள் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் போர்ட் மாற்றி புதிய பி.எஸ்.என்.எல் சிம் கார்டு பெற்று கொள்ளலாம், என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...