கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வலிப்புநோய் என்பது பெரும் மூளையில் பாதிப்பு ஏற்படும் போது ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையாகும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் சில நேரங்களில் திடீரென்று மயங்கி விழுந்தவுடன் கை கால்கள் இழுக்கப்பட்டு, வாயில் நுரை வரும். இந்நிலை ஏற்படும் நபரை, வலிப்பு ஏற்படும் பொழுது முதலில் காற்றோட்டமான சூழலை ஏற்படுத்தி அவரது தலையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். மேலும், இந்த பாதிப்பு ஏற்படும் பொழுது தேவையற்று காலத்தை வீணடிக்காமல் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது சிறந்தது.
இதையடுத்து, இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உலகம் முழுவதும் இன்று வலிப்பு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் வலிப்பு நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீயுராலஜிக்கள் சொசைட்டி சார்பாக மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன், இந்த பேரணியை கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார்.
மேலும், விழிப்புணர்வு பேரணியில் வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வலிப்பு நோய் குணமடைய செய்வது குறித்தான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தப்பட்டிருந்தன. அதோடு, பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டன. இந்த பேரணியானது அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவமனையின் அலுவலர்கள், நரம்பியல் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.