திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு 'ஃபேமிலி பேக்', திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

ஐஸ் கிரிம் மற்றும் செல்போன் போன்ற சேவையில் தான் ஃபேமிலி பேக் திட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் திமுக -காங்கிரஸ் கூட்டணியும் ஒரு ஃபேமிலி பேக் திட்டத்தை போன்று தான்.

திருப்பூர்: திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி 20000 தொண்டர்கள் மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து கடுமையான விமர்சனம் செய்தார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது ;

ஐஸ் கிரிம் மற்றும் செல்போன் போன்ற சேவையில் தான் ஃபேமிலி பேக் திட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால்  திமுக -காங்கிரஸ் கூட்டணியும் ஒரு ஃபேமிலி பேக் திட்டத்தை போன்று தான். 



என்ன விந்தை என்றால், இவர்கள் கூட்டணி மூலம் தான் ஃபேமிலி பெயில் என்று ஒரு புதிய வார்த்தை உருவாகியுள்ளது. 

கர்மவீரர் காமராஜர் கற்பனை செய்த ஊழலற்ற ஒரு ஆட்சியை பிஜேபி அரசால் மட்டுமே தர முடியும்.

2019 ஆண்டு பிஜேபி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு 5 லட்சம் வரை வரி விலக்கு அறிவித்துள்ளது. 

ஆனால் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் பிஜேபி அரசின் வரி விலக்கு கொள்கைகளை நடுத்தர மக்களுக்கு ஆனது இல்லை என்று தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அவர் நடுத்தர வர்க மக்களை கேவலமாக விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமான விவகாரத்தை வைத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைபற்றலாம் என்று கனவு கண்டு வருகிறது.

ஆனால், உண்மையில் வாஜ்பாய் அரசு பொறுப்பு ஏற்ற பிறகே இந்திய பாதுகாப்பு துறை வளர்ச்சி அடைந்தது. 

பா ஜ க தலைமையிலான கூட்டணி விவசாயிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸின் பொய் வாக்குறுதிகளை மக்கள்  ஏன் நம்ப வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.



அதேபோல ஜி ஏஸ் டி வரி சலுகைகள் மூலம் சிறு மற்றும் குறு தொழில் முந்தய ஆண்டுகளை காட்டிலும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...