உதகையில் 30வது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

நீலகிரி : உதகையில் 30வது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி : உதகையில் 30வது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. 



கடந்த 4ம் தேதி முதல் தமிழகமெங்கும் போக்குவரத்துத்துறை, காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் நடைபெற்று வந்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த சாலை பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழா வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பின் அவசியத்தையும் பாதுகாப்பான பயணத்தின் அவசியத்தையும் கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் எடுத்துரைத்தார். 

இந்நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதில், இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட அரசு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்தும், விதிமுறைகள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். 

மேலும், நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ், விபத்தில்லா சாலை பயணத்தை கடைபிடிப்பதன் அவசியத்தை உறுதிமொழியாக கூற, கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...