உதகை தாவரவியல் பூங்காவில் குரங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு : சுற்றுலாப்பயணிகள் அவதி

நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் அதிகரித்து வரும் குரங்களால் சுற்றுலாப்பயணிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் அதிகரித்து வரும் குரங்களால் சுற்றுலாப்பயணிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில், நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சீசன் நாட்கள் அல்லாது, சாதாரண நாட்களில் கூட, 5, 000 முதல், 6,000 ஆயிரம் வரை வெளியூர் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் வருகின்றனர். 

இந்நிலையில், சமீப காலமாக, தாவரவியல் பூங்காவில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வரும் குரங்குகள், சுற்றுலா வரும் சிறுவர்களின் கையில் உள்ள தின்பண்டங்களை பறித்து செல்வது தொடர்கிறது. மேலும், பூங்காவினுள் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் வீசப்படும் உணவு கழிவுகளை கிளறி உண்பதால், புல்தரை மற்றும் நடைபாதைகளில் கழிவுகள் சிதறி கிடக்கின்றன. 

பெரும்பாலான நேரங்களில், குரங்குகள் சுற்றுலா பயணிகள் எடுத்து செல்லும் பைகளில் உணவுப் பொருட்கள் வைத்திருப்பின், அதனை பறித்து உண்ணுவதற்காக, பின் தொடர்கின்றன. இந்த செயல்களால் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப்பயணிகள் கூடும் தாவரவியல் பூங்காவில் நடமாடும் குரங்குகளை, கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவிப்பது அவசியமாகும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...