கோவை : பேரூர் படித்துறையில் சாக்கடை கழிவுகள் தேங்காமல் வெளியேறும் வகையில் சீரமைக்க நொய்யல் ஆற்றைத் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.
கோவை : பேரூர் படித்துறையில் சாக்கடை கழிவுகள் தேங்காமல் வெளியேறும் வகையில் சீரமைக்க நொய்யல் ஆற்றைத் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.
கோவை மாவட்டம், பேரூர் படித்துறையில் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றும் இந்த களப்பணியினை சமூக ஆர்வலர் அன்பரசு தொடங்கி வைத்தார்.

அதில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பேரூர் பஞ்சாயத்து பொதுமக்கள், பொதுப்பணித்துறை, பணியாளர்கள் உட்பட பலருடன் இணைந்து பணியாற்றினார்கள்.

இந்த நிகழ்வின் போது, தன்னார்வலர்கள் கோவில் அருகில், படித்துறை அருகே உள்ள கடைகளில் பொது மக்களிடம் தண்ணீரில் தூக்கி எறியப்படும் துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் இவைகளால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், களப்பணியின் இறுதியில் காந்தி அஸ்தி கலசம் முன்பு நொய்யல் படித்துறையை பாரம்பரியம் மாறாமல் காப்போம் என்ற உறுதிமொழியுடன், வரும் வாரம் பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது. இந்த பணியில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் அரசுத்துறை, அர்ச்சகர்கள் சங்கம் அனைவரும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், பேரூர் படித்துறையில் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றும் இந்த களப்பணியினை சமூக ஆர்வலர் அன்பரசு தொடங்கி வைத்தார்.

அதில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பேரூர் பஞ்சாயத்து பொதுமக்கள், பொதுப்பணித்துறை, பணியாளர்கள் உட்பட பலருடன் இணைந்து பணியாற்றினார்கள்.

இந்த நிகழ்வின் போது, தன்னார்வலர்கள் கோவில் அருகில், படித்துறை அருகே உள்ள கடைகளில் பொது மக்களிடம் தண்ணீரில் தூக்கி எறியப்படும் துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் இவைகளால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், களப்பணியின் இறுதியில் காந்தி அஸ்தி கலசம் முன்பு நொய்யல் படித்துறையை பாரம்பரியம் மாறாமல் காப்போம் என்ற உறுதிமொழியுடன், வரும் வாரம் பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது. இந்த பணியில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் அரசுத்துறை, அர்ச்சகர்கள் சங்கம் அனைவரும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.