குன்னூர் குடியிருப்பு பகுதிக்குள் கூட்டமாக புகுந்த காட்டெருமைகளால் மக்கள் பீதி

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் இன்று காலை கூட்டமாக புகுந்த காட்டெருமைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் இன்று காலை கூட்டமாக புகுந்த காட்டெருமைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள காந்திநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இன்று கூட்டமாக வந்த காட்டெருமைகள் தேயிலைத்தோட்டம் வழியாகக் குடியிருப்பு பகுதிகளைக் கடந்துசென்றதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். 

இந்த காட்டெருமை கூட்டம் எந்த வனப்பகுதியில் இருந்து திடீரென ஊருக்குள் வந்தது என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். அண்மைக்காலமாக, குன்னூர் பேருந்து நிலையம், ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டெருமையால் மக்கள் அச்சடைந்துள்ள நிலையில், தற்போது நகரின் முக்கிய பகுதிகளில் உலா வந்த இந்த காட்டெருமைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...