நீலகிரி : நீலகிரியில் மலைரயிலுக்கென மார்ச் மாதத்துக்குள் புதிதாக, 15 பெட்டிகள் வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி : நீலகிரியில் மலைரயிலுக்கென மார்ச் மாதத்துக்குள் புதிதாக, 15 பெட்டிகள் வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மலைரயில் உலக பிரசித்திபெற்றதாகும். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த நீராவி மலைரயிலில் பயணிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மலை ரயிலை மேம்படுத்தும் பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி இன்ஜினை புனரமைத்து இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம், குன்னுார், உதகை, கேத்தியிடையே இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், சுற்றுலாப்பயணிகளின் வசதிகேற்ப இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக, 15 பெட்டிகள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் பெட்டிகளில் நவீனகழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக வரும் இந்த மலைரயில் பெட்டிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.