கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியை ஒட்டிய பவானி சாகர் நீர்தேக்க பகுதியில் காட்டுயானை தாக்கி விவசாயி முருகன் படுகாயம் அடைந்துள்ளார்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியை ஒட்டிய பவானி சாகர் நீர்தேக்க பகுதியில் காட்டுயானை தாக்கி விவசாயி முருகன் படுகாயம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள பவானி சாகர் நீர்தேக்க பகுதியில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த பருவ மழையின் போது பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, அணை நிரம்பியது. இதனால், அங்கு விவசாயம் செய்த விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் வெளியேறினர்.
இந்நிலையில், தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 85 அடிக்கும் குறைந்து உள்ளதால், தண்ணீரில் மூழ்கிய நிலப்பரப்புகள் தற்போது வெளியே வந்துள்ளன. இதனைக் காணவும், மீண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ளவும் அம்மன்புதூரை சேர்ந்த விவசாயியான முருகன், நிலத்தைப் பார்வையிட சென்றிருக்கிறார். அதன் பின் திரும்பிய அவர், ஒத்தை கல் பாலம் அருகே வந்துள்ளார்.
நீர்தேக்க பகுதிக்கு செல்லும் சாலை வனச்சாலை என்பதால், அங்கு மறைந்திருந்த காட்டுயானை முருகனை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து இரண்டு கால் பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை மீட்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள பவானி சாகர் நீர்தேக்க பகுதியில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த பருவ மழையின் போது பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, அணை நிரம்பியது. இதனால், அங்கு விவசாயம் செய்த விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் வெளியேறினர்.
இந்நிலையில், தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 85 அடிக்கும் குறைந்து உள்ளதால், தண்ணீரில் மூழ்கிய நிலப்பரப்புகள் தற்போது வெளியே வந்துள்ளன. இதனைக் காணவும், மீண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ளவும் அம்மன்புதூரை சேர்ந்த விவசாயியான முருகன், நிலத்தைப் பார்வையிட சென்றிருக்கிறார். அதன் பின் திரும்பிய அவர், ஒத்தை கல் பாலம் அருகே வந்துள்ளார்.
நீர்தேக்க பகுதிக்கு செல்லும் சாலை வனச்சாலை என்பதால், அங்கு மறைந்திருந்த காட்டுயானை முருகனை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து இரண்டு கால் பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை மீட்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.