நீலகிரி : குன்னூர் அருகே உபதலை குப்பைக்குழி பகுதியில் மருந்து கழிவுகளுடன் கூடிய குப்பைகளை எரிப்பதால், சுகாதாரம் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி : குன்னூர் அருகே உபதலை குப்பைக்குழி பகுதியில் மருந்து கழிவுகளுடன் கூடிய குப்பைகளை எரிப்பதால், சுகாதாரம் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட உபதலை பகுதியில் வள்ளுவர் நகர், வாசுகி நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகள் உள்ளன. இப்பகுதி அதிகளவில் குடியிருப்புகளைக் கொண்ட பகுதியாக உள்ளது. இங்குள்ள குப்பைக் குழியில் குன்னூரில் உள்ள 30 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள், துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, கொட்டப்படுகிறது. இதில், மருத்துவக் கழிவுகளும் அடங்கும்.
இவை அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுவதால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால், இதிலிருந்து வெளியேறும் புகையால், கண் எரிச்சல், வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து, புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில், குப்பைகளை எரிக்கும் செயலை கைவிடுவதோடு, மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட உபதலை பகுதியில் வள்ளுவர் நகர், வாசுகி நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகள் உள்ளன. இப்பகுதி அதிகளவில் குடியிருப்புகளைக் கொண்ட பகுதியாக உள்ளது. இங்குள்ள குப்பைக் குழியில் குன்னூரில் உள்ள 30 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள், துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, கொட்டப்படுகிறது. இதில், மருத்துவக் கழிவுகளும் அடங்கும்.
இவை அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுவதால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால், இதிலிருந்து வெளியேறும் புகையால், கண் எரிச்சல், வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து, புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில், குப்பைகளை எரிக்கும் செயலை கைவிடுவதோடு, மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.