கோவை : வன்முறையைத் தூண்டும் விதமாக சுவரொட்டி ஒட்டிய பா.ஜ.க., நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ம.தி.மு.க.,வினர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை : வன்முறையைத் தூண்டும் விதமாக சுவரொட்டி ஒட்டிய பா.ஜ.க., நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ம.தி.மு.க.,வினர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தினை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்த நிலையில், கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க., இளைஞரணி சார்பில் பீளமேடு பகுதியில் பாரத பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்துள்ள வைகோவை வரவேற்று சிறப்பாக கவனிக்க காத்திருக்கிறோம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், அதில் நேரமும், இடமும் அறிவித்தால் சிறப்பாக கவனிக்க நலமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் ம.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய போஸ்டரை ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க.,வினர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தில் இதே வாசகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு பா.ஜ.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவையிலும் வன்முறை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ம.தி.மு.க.,வினர் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தினை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்த நிலையில், கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க., இளைஞரணி சார்பில் பீளமேடு பகுதியில் பாரத பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்துள்ள வைகோவை வரவேற்று சிறப்பாக கவனிக்க காத்திருக்கிறோம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், அதில் நேரமும், இடமும் அறிவித்தால் சிறப்பாக கவனிக்க நலமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் ம.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய போஸ்டரை ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க.,வினர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தில் இதே வாசகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு பா.ஜ.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவையிலும் வன்முறை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ம.தி.மு.க.,வினர் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
