கோவை : கோவையில் நடைபெற்ற சரக்கு இணைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை : கோவையில் நடைபெற்ற சரக்கு இணைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் கூட்டமைப்பு மற்றும் கோவையைச் சேர்ந்த இந்திய சீடிரேட் அமைப்பும் இணைந்து சரக்கு இணைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், துறைமுக பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதலீடுகளை அதிகரித்து தொழில்நுட்பத்துறையை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உலகளவில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய ஏற்றுமதி நிறுவனக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எம். ரபீக் அகமது பேசுகையில், "முதலீடுகளை அதிகரித்து மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். இதன்மூலம், நாட்டை உலகளாவிய மதிப்புச் சங்கிலி தொடர்பான உற்பத்தியில், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல உதவும்," என்றார்.
திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் லாஜிஸ்டிக் விலை உயர்ந்து காணப்படும் நிலையில், லாஜிஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் கொள்கை முடிவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடேயே, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சரிபார்த்து அனுப்பும் நேரத்தைக் குறைக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை தலைமை ஆணையர் ரஞ்சன் குமார் ரவுத்ரி தெரிவித்தார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் கூட்டமைப்பு மற்றும் கோவையைச் சேர்ந்த இந்திய சீடிரேட் அமைப்பும் இணைந்து சரக்கு இணைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், துறைமுக பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதலீடுகளை அதிகரித்து தொழில்நுட்பத்துறையை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உலகளவில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய ஏற்றுமதி நிறுவனக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எம். ரபீக் அகமது பேசுகையில், "முதலீடுகளை அதிகரித்து மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். இதன்மூலம், நாட்டை உலகளாவிய மதிப்புச் சங்கிலி தொடர்பான உற்பத்தியில், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல உதவும்," என்றார்.
திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் லாஜிஸ்டிக் விலை உயர்ந்து காணப்படும் நிலையில், லாஜிஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் கொள்கை முடிவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடேயே, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சரிபார்த்து அனுப்பும் நேரத்தைக் குறைக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை தலைமை ஆணையர் ரஞ்சன் குமார் ரவுத்ரி தெரிவித்தார்.