திருப்பூர் : வரும் 10-ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையையொட்டி, சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பூர் : வரும் 10-ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையையொட்டி, சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பா.ஜ.க., சார்பில் வரும் 10-ம் தேதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஈட்டிவீரம்பாளையத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஹெலிபேட், அரசு விழாவுக்கான மேடை மற்றும் பொதுக்கூட்ட மேடை ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, 3 டி.ஜி.பி., 17 எஸ்.பி. மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களை தணிக்கை செய்யவும், சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என இரு தொலைபேசி எண்ணையும் வழங்கி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பா.ஜ.க., சார்பில் வரும் 10-ம் தேதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஈட்டிவீரம்பாளையத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஹெலிபேட், அரசு விழாவுக்கான மேடை மற்றும் பொதுக்கூட்ட மேடை ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, 3 டி.ஜி.பி., 17 எஸ்.பி. மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களை தணிக்கை செய்யவும், சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என இரு தொலைபேசி எண்ணையும் வழங்கி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.