அடிப்படை தேவைகளின் வரி உயர்வுக் கண்டனம் : காரமடையில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் போராட்டம்

கோவை : வீடு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளின் வரி உயர்விற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மேட்டுப்பாளையம் தாலூகாவிற்கு உட்பட்ட காரமடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : வீடு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளின் வரி உயர்விற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மேட்டுப்பாளையம் தாலூகாவிற்கு உட்பட்ட காரமடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வரி, தண்ணீர் வரி, உரிம கட்டணம் உள்ளிட்டவை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்திய கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காரமடை பேருந்து நிலையம் எதிரே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், மக்களின் மீது கூடுதல் வரியினை சுமத்தக்கூடாது, உயர்த்திய வரியினை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என முழக்கங்கள் எழுப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காரமடை பேரூராட்சி அலுவகத்திற்கு ஊர்வலமாக சென்று, அங்கிருந்த செயல்அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரில் அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...