கோவை : விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளை போற்றும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் 5 -வது கொங்குநாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று சமத்தூரில் தொடங்கியது.
கோவை : விவசாயிகளுக்கு உதவும் கால்நடைகளை போற்றும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் 5 -வது கொங்குநாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று சமத்தூரில் தொடங்கியது.
வானவராயர் ஃபவுண்டேஷன் சார்பில், வருடந்தோறும் நடத்தப்படும் கொங்கு நாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று தொடங்கி அடுத்தடுத்த மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வாக கொடியேற்றத்துடன், வேளாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது.

இக்கண்காட்சியில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கண்காட்சியை பார்வையிட்ட சின்னவேடம்பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், விவசாயிகளுக்கும், ஸ்டால்கள் அமைத்துள்ள நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படும் 'மாதிரி பண்ணை', சங்கர் வானவராயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், இன்று மாலை 108 மாடுகள் பங்குபெறும் கோ பூஜை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவிற்கு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் வருகை தந்துள்ளனர். காங்கேயம் பசு, பல்வேறு இன பசு மாடு, பூச்சிக்காளை, எருது, குதிரை உள்ளிட்ட பல விலங்குகளை ஒரே இடத்தில் பார்வையிடு வாய்ப்பாக இது அவர்களுக்கு அமையும்.
வானவராயர் ஃபவுண்டேஷன் சார்பில், வருடந்தோறும் நடத்தப்படும் கொங்கு நாட்டு வேளாண் மற்றும் கால்நடை திருவிழா இன்று தொடங்கி அடுத்தடுத்த மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வாக கொடியேற்றத்துடன், வேளாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது.

இக்கண்காட்சியில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கண்காட்சியை பார்வையிட்ட சின்னவேடம்பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், விவசாயிகளுக்கும், ஸ்டால்கள் அமைத்துள்ள நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படும் 'மாதிரி பண்ணை', சங்கர் வானவராயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், இன்று மாலை 108 மாடுகள் பங்குபெறும் கோ பூஜை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவிற்கு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் வருகை தந்துள்ளனர். காங்கேயம் பசு, பல்வேறு இன பசு மாடு, பூச்சிக்காளை, எருது, குதிரை உள்ளிட்ட பல விலங்குகளை ஒரே இடத்தில் பார்வையிடு வாய்ப்பாக இது அவர்களுக்கு அமையும்.