திருப்பூரில் காரில் கடத்தி சென்ற 3000க்கும் மேற்பட்ட போலி மது பாட்டில்கள் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் அருகே வாகன சோதனையின் போது 3000க்கும் மேற்பட்ட போலி மது பாட்டில்களையும், ஈச்சர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே வாகன சோதனையின் போது 3000க்கும் மேற்பட்ட போலி மது பாட்டில்களையும், ஈச்சர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 



திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. உடனடியாக, போலீசார் அதனை பின் தொடர்ந்து துரத்தி பிடித்தனர். இதையடுத்து, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். 

தொடர்ந்து போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் 3136 போலி மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் உடனடியாக மது விலக்கு போலீசாருக்கு அளிக்கப்பட்டது. விரைந்து வந்த மது விலக்கு போலீசார் வாகனத்தில் இருந்த ஆவணங்களின் உதவியுடன், பாலசமுத்திரம் பகுதியில் கோழிப்பண்ணையில் போலி மதுபான ஆலை இயங்கி வருவதைக் கண்டறிந்தனர். 

இதையடுத்து, அங்கிருந்த காலி மது பாட்டில்கள் மற்றும் லேபிள்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஆலை உரிமையாளர் லோகேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதில், 3136 போலி மது பாட்டில்களையும், ஈச்சர் வாகனத்தையும் மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...