கோவை : கோவை வழியாக கேரளாவுக்கு, கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி ஹவாலா பணத்தை பாலக்காடு போலீசார் பறிமுதல் செய்தனர். அதனோடு கடத்திய 5 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கோவை : கோவை வழியாக கேரளாவுக்கு, கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி ஹவாலா பணத்தை பாலக்காடு போலீசார் பறிமுதல் செய்தனர். அதனோடு கடத்திய 5 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கோவையை அடுத்த பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் ஒரு கும்பல் ஹவாலா பணத்தை கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பாலக்காடு ரயில்வே நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர் கொண்ட கும்பலை போலீசார்கள் விசாரித்தனர்.
இந்த விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அதையடுத்து, சந்தேகத்துக்கிடமான நபர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில், அவர்கள் உடம்பில் பெல்ட் அணிந்து ரூ.2 ஆயிரம், ரூ.500 என்று கட்டு கட்டாக பணம் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, முழுமையான சோதனையில் ரூ.2.5 கோடி பணத்தை பறி முதல் செய்தனர்.

மேலும், இதில் ஒருவர் கேரளா மாநிலம் பாலக்காடு என்பதும், இரண்டு நபர்கள் கொல்லம் என்பதும் மற்ற இருவரும் மகாராஷ்டிரா என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பாலக்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையை அடுத்த பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் ஒரு கும்பல் ஹவாலா பணத்தை கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பாலக்காடு ரயில்வே நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 நபர் கொண்ட கும்பலை போலீசார்கள் விசாரித்தனர்.
இந்த விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அதையடுத்து, சந்தேகத்துக்கிடமான நபர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில், அவர்கள் உடம்பில் பெல்ட் அணிந்து ரூ.2 ஆயிரம், ரூ.500 என்று கட்டு கட்டாக பணம் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, முழுமையான சோதனையில் ரூ.2.5 கோடி பணத்தை பறி முதல் செய்தனர்.

மேலும், இதில் ஒருவர் கேரளா மாநிலம் பாலக்காடு என்பதும், இரண்டு நபர்கள் கொல்லம் என்பதும் மற்ற இருவரும் மகாராஷ்டிரா என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பாலக்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.