கோவை : கோவையில் நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்குகிறது.
கோவை : கோவையில் நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்குகிறது.
இந்த கணக்கெடுப்பானது, கோவை வனத்துறை மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம்(World Wide Fund for Nature) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. இதில், 60 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள இந்த மொத்த கணக்கெடுப்பும் கோவையில் உள்ள 26 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நடத்தப்படுகின்றன. கடந்த வருடம் எடுத்த கணக்கெடுப்பின் படி, 166 வகையான நீர்வாழ் மற்றும் அதனோடு தொடர்புடைய பறவைகள் கண்டறியப்பட்டன.