நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு, நெல்லிக்கம்பை கிராமங்களில் 2 நாளுக்கு மேலாக உலா வந்த இரண்டு யானைகள் ஆணிக்கல் மாயார் வழியாக சிறியூர் வனப் பகுதிக்குள் தானாகவே சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு, நெல்லிக்கம்பை கிராமங்களில் 2 நாளுக்கு மேலாக உலா வந்த இரண்டு யானைகள் ஆணிக்கல் மாயார் வழியாக சிறியூர் வனப் பகுதிக்குள் தானாகவே சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு,நெல்லிக்கம்பை கிராமங்களில் கடந்த இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இரண்டு காட்டு யானைகள் உலா வந்ததால் இப்பகுதி விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து வனத் துறையினர் யானைகளைக் கண்காணிக்கும் பணியி்ல் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த இந்த யானைகள் தானாக ஆணிக்கல்,மாயார் வழியாக, சிறியூர் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வழக்கமாக தோட்டபணிகளுக்கு சென்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கெந்தொரை, கரி முடக்கு,நெல்லிக்கம்பை கிராமங்களில் கடந்த இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இரண்டு காட்டு யானைகள் உலா வந்ததால் இப்பகுதி விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து வனத் துறையினர் யானைகளைக் கண்காணிக்கும் பணியி்ல் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த இந்த யானைகள் தானாக ஆணிக்கல்,மாயார் வழியாக, சிறியூர் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வழக்கமாக தோட்டபணிகளுக்கு சென்றனர்.