கோவை : கோவை, சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை தாக்கி, தங்க கட்டியைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை : கோவை, சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை தாக்கி, தங்க கட்டியைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீவ் சிங் (26). இவர் கோவை மரக்கடை பகுதியில் வசித்து வருகிறார். இவர் தங்க நகை வியாபாரம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் வியாபார நிமித்தமாகச் சென்னைக்கு விமான மூலம் சுமார் 8 கிலோ எடையுள்ள தங்க கட்டியை அனுப்ப இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பிரதீவ் சிங் வந்த வாகனத்தை வழி மறித்துள்ளது. மேலும், அவர் மீது தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த தங்ககட்டியை பறித்து சென்றனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதீப் சிங் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு குற்றவியல் போலீசார் பிரதீவ் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், பிரதீவ் சிங் தான் கொண்டு வந்து இருந்த தங்கம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். ஆகையால், புகாரின் உண்மை தன்மை குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோலவே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பலை போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்வத்தை அடுத்து, அதனை ஆராய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர்கள் பாஸ்கர், சோமசேகர், சோமசுந்தர், பால்ராஜ், ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் விசாரணை தொடங்கியது.