பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வினா, விடை புத்தகங்களையும், விலையில்லா மிதிவண்டிகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை : ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வினா, விடை புத்தகங்களையும், விலையில்லா மிதிவண்டிகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 520 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 396 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 215 பேருக்கும் ஆகமொத்தம் 1,131 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், வினா, விடை புத்தகங்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது :- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பள்ளிக் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் உயர்வுக்காக விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினிகள், நோட்டுப்புத்தகங்கள், காலணிகள், வண்ணச்சீருடைகள் போன்ற அடுக்கடுக்கான நலத்திட்டங்களை வழங்கி இந்தியாவிலேயே தமிழகத்தில் முன்னோடி மாநிலமாக திகழச் செய்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, இத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, எனக் கூறினார். 

 

இந்த நிகழ்ச்சியில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மாநகர கல்வி அலுவலர் (பொ) ஆர்.ரவி, ஆலயம் அறக்கட்டளை பொறியாளர் சந்திரசேகர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சதீஸ்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...