கோவை : கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது.
கோவை : கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது.
கோவை, பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் சாந்தலிங்கர் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. அதனுடைய அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில், கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- தரமான மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில் சுகாதார துறைக்கு தமிழக அரசு ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழகம் மருத்துவ சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. மக்கள் அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற அதிகளவில் வருகின்றனர். சாந்தலிங்கர் மருத்துவமனையினால் சுற்றுப்புற மக்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை பெற்று பயனடைவார்கள். ஏழை, எளிய மக்களுக்காகச் சேவையாற்றுவது போற்றுதலுக்கு உரிய செயலாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.