நீலகிரி : சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக, உதகை படகு இல்லம் ஏரியில் ரூ.22 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் 12 படகுகள் வாங்கப்படவுள்ளதாகச் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி : சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக, உதகை படகு இல்லம் ஏரியில் ரூ.22 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் 12 படகுகள் வாங்கப்படவுள்ளதாகச் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தாலும், படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உதகை படகு இல்லத்தில் 91மிதிபடகு, 33 மோட்டார் படகு, 9 துடுப்பு படகுகள் இயக்கத்தில்உள்ளன.
இதையடுத்து, ஏப்ரலில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்து வருகிறது. அதன் சார்பில் ரூ.22 லட்சம் செலவில் 9 மிதிபடகு, 3 மோட்டார் படகு வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "நவீன வசதிகளுடன் கூடிய புதிய படகுகள், ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து சுற்றுலாப்பயணிகள் சவாரிக்காக இயக்கப்படும்,"என்றனர்.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தாலும், படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உதகை படகு இல்லத்தில் 91மிதிபடகு, 33 மோட்டார் படகு, 9 துடுப்பு படகுகள் இயக்கத்தில்உள்ளன.
இதையடுத்து, ஏப்ரலில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்து வருகிறது. அதன் சார்பில் ரூ.22 லட்சம் செலவில் 9 மிதிபடகு, 3 மோட்டார் படகு வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "நவீன வசதிகளுடன் கூடிய புதிய படகுகள், ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து சுற்றுலாப்பயணிகள் சவாரிக்காக இயக்கப்படும்,"என்றனர்.