கோவையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் பேரணி

கோவை : எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலான பேரணி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் நடத்தப்பட்டது.

கோவை : எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலான பேரணி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் நடத்தப்பட்டது. 



நாடு முழுவதும் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 



கடந்த 3-ம் தேதி காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியின் மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் கே. நடராஜன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சித்ரா ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 



இந்தப் பேரணியில் என்.சி.சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றவர்கள் சென்றனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...