கோவையைத் தொடர்ந்து திருப்பூரிலும் சின்னத்தம்பிக்கு ஆதரவு : பேனர்கள் வைப்பு

திருப்பூர் : காட்டு யானை சின்னத்தம்பிக்கு ஆதரவாக கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் தன்னார்வலர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.


திருப்பூர் : காட்டு யானை சின்னத்தம்பிக்கு ஆதரவாக கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் தன்னார்வலர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தன்னார்வலர்கள் சின்னத்தம்பி காட்டு யானைக்கு ஆதரவாக 'சேவ் சின்னத்தம்பி' என ஹேஸ் டேக் இட்டு பேனர்கள் வைத்துள்ளனர். இந்த பேனரில் 'மனிதர்கள் செய்யும் குற்றத்திற்கு சின்னத்தம்பிக்கு தண்டனையா..? சின்னத்தம்பியை வாழ விடுங்கள், காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில்… காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில்..' என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. 



பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேனரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வதுடன், சின்னத்தம்பிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, உரிய அனுமதி இன்றியும், அமைப்பின் பெயர் பதிவிடப்படாமலும் பேனர் வைக்கப்பட்டிருப்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...