சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை வெளியிட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கோவை : அரசின் உத்தரவையும் மீறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை கல்வித்துறையின் இணையளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கோவை : அரசின் உத்தரவையும் மீறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை கல்வித்துறையின் இணையளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 



பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கான 21 மாத நிலுவைத் தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் என 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. 

இதனிடையே, அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசின் எச்சரிக்கைக்குப் பிறகு, கொடுத்த நேரத்தில் பணியில் சேர்ந்த பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் வெளியிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியப் பிடித்தம் மற்றும் உயர் பதவி வழங்குவது நிறுத்தப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பெயர்கள் மற்றும் விபரம் பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 19 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...