கூடலூர் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை : கால்நடை மருத்துவர் இல்லாததால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம்

நீலகிரி : முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால், கூடலூர் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால், கூடலூர் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கூடலூர் அருகே பாட்டவயல் கைவட்டப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, கட்டிலுக்கு அடியில் படுத்து இருந்துள்ளது. இதனையறியாமல் வீட்டில் இருந்தவர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில், கட்டிலுக்கு அடியில் இருந்து சத்தம் வந்ததை அடுத்து, சிறுத்தை இருப்பதை அறிந்துள்ளனர். இதையடுத்து, வீட்டு உரிமையாளர் கதவை பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டார். தற்சமயம் சிறுத்தை கட்டிலுக்கு அடியில் பதுங்கி உள்ளது.



முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால், வீட்டிற்குள் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உதகையில் உள்ள வனக் கால்நடை மருத்துவர் மனோகரன், சின்னத்தம்பி யானையைக் கண்காணிக்க உடுமலை சென்றுள்ளதால், வீட்டினுள் உள்ள சிறுத்தையைப் பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...