கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே சுற்றித்திரிந்த அரியவகை பாம்பினமான ராஜநாகம் பிடிபட்டது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே சுற்றித்திரிந்த அரியவகை பாம்பினமான ராஜநாகம் பிடிபட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துரை அருகே உள்ள புளியமரம் என்ற குடியிருப்பு பகுதிகள் ராஜநாகம் ஒன்று சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் பாம்பு பிடி வீரர்களுடன் சென்ற வனத்துறையினர், அங்கு குடியிருப்பு அருகே ஒரு புதரில் மறைந்திருந்த 16 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை பத்திரமாக பிடித்தனர்.

பிடிபட்ட ராஜநாகம் பெண் இனத்தை சார்ந்தது என்றும், பொதுவாக நீர் நிலைகளை ஒட்டியே வாழக்கூடிய இந்த வகை பாம்புகள், கல்லார் பகுதியில் குளிர் சீதோசநிலை உள்ளதால் இங்கு வந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பத்திரமாக மீட்கப்பட்ட இந்த ராஜநாகம் கல்லாருக்கு மேல் பகுதியில் உள்ள பர்லியாறு அருகே அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இனிவரும் காலங்களில் வறட்சி ஏற்படும் சூழலில் பாம்புகள் வெளியேறும். எனவே, பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
