சென்னை டாக்சி ஓட்டுநர் ராஜேஷூக்கு நீலகிரியில் அஞ்சலி

நீலகிரி : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்தும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் 3000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கவில்லை.


நீலகிரி : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்தும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் 3000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கவில்லை. 



கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ், காவல்துறை அதிகாரி அவமானப்படுத்தியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 3000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களை இயக்காமல், அவருக்காக அஞ்சலி செலுத்தினர். 

உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், உதகையில் நடைபெற்ற அஞ்சலிக்கு பின்பு கார் ஓட்டுநர்கள் கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓட்டுநர்களின் பணி சிரமப்பட்டுச் செய்து வருகிறோம். ஒரு சிலரால் சில மன உளைச்சலுக்கு ஆளாகி உயிர் போகும் நிலை ஏற்படுகிறது, "என்றார். 

மேலும், உதகையில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போரும், சுற்றுலா வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்வதால் பிரதான தொழிலாக கொண்டு இயக்கும் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா வாகனங்கள் இயங்காததால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...