கோவையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாநகர காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோவை : கோவை மாவட்டத்தில், மாநகர காவல் துறையின் சார்பில், 30வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை : கோவை மாவட்டத்தில், மாநகர காவல் துறையின் சார்பில், 30வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



தமிழகம் முழுவதும் 30வது சாலை பாதுகாப்பு வார விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோவையில் தொடங்கப்பட்ட இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளானது வரும் 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்குதல், சாலை விதிகளை மதித்து வருபவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து செய்ய உள்ளனர். 

இதையடுத்து, கோவை மாவட்டத்தின் முக்கியச் சந்திப்புகளில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் சாலை பாதுகாப்பு தொடர்பான வீதிநாடகங்களும் நடைபெற உள்ளது. இதனிடையே, இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 



இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாநகர காவல்துறையினர் வ.உ.சி மைதானத்திலிருந்து, அண்ணா சிலை சாலை வழியாக சென்று ஆர்டிஓ ஆபீஸ் சாலை வழியாக சென்று, திரும்பி மீண்டும் வ.உ.சி மைதானத்தில் பேரணியை முடித்தனர். இந்த பேரணியின் போது காவல்துறையினர் சாலைவிதிகளை மதிப்போம், ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுவோம், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவதைத் தவிர்ப்போம், சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு,என பல விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். 



மேலும், இந்த விழிப்புணர்வு பேரணியில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஐ.பி.எஸ் கூறியதாவது :- கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வருகின்றனர். இப்படி தொடர்ந்து சாலை பாதுகாப்பை வலியுறுத்துவதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை குறைகிறது. மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர காவல் துறையினர் அனைவரும் இணைந்து செய்து வருகிறோம். 

அதேபோலவே, போலீஸ் இ-ஐ ஆப் மூலம் பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டி வருபவர்கள் குறித்த புகார்களை அளித்து வருகின்றனர். இந்த ஆப் ஆனது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது. தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்றார். 

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் ஐபிஎஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர். எல் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...