நீலகிரி : குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிலாளர் பிரதிநிதிகள் தேர்தலில் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் வெற்றி பெற்றதையடுத்து, அந்த சங்கத்தை சேர்ந்த 12 பேர் பல்வேறு பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நீலகிரி : குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிலாளர் பிரதிநிதிகள் தேர்தலில் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் வெற்றி பெற்றதையடுத்து, அந்த சங்கத்தை சேர்ந்த 12 பேர் பல்வேறு பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணிக்குழு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பணிக்குழு தேர்வில் 10 உறுப்பினர்கள் மற்றும் கேண்டீன் குழுவில், 2 உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் சி.எப்.எல்.யூ., - டி.எப்.எல்.யூ. கூட்டணியாகவும், ஐ.என்.டி.யு.சி., தனித்தும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 1,470 தொழிலாளர்களில், 93.8 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. பணிக்குழுவில், ஐ.என்.டி.யு.சி.,யை சேர்ந்த திலீப் குமார் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அருண்குமார் (இணை பொது செயலாளர்), நடராஜன் (துணைத் தலைவர்), ஜோசி லாசர் (செயல் தலைவர்), மூர்த்தி, ஏசுதாஸ், ராமகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரும், வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, சி.எப்.எல்.யு., தொழிற்சங்கம் சார்பில் ஈஸ்வரன், டி.எப்.எல்.யூ.,வில் மகேஸ்வரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். கேன்டீன் நிர்வாக குழுவில், ஐ.என்.டி.யு.சி., யை சேர்ந்த ராஜ்குமார், ரவிகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனை இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.


குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணிக்குழு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பணிக்குழு தேர்வில் 10 உறுப்பினர்கள் மற்றும் கேண்டீன் குழுவில், 2 உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் சி.எப்.எல்.யூ., - டி.எப்.எல்.யூ. கூட்டணியாகவும், ஐ.என்.டி.யு.சி., தனித்தும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 1,470 தொழிலாளர்களில், 93.8 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. பணிக்குழுவில், ஐ.என்.டி.யு.சி.,யை சேர்ந்த திலீப் குமார் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அருண்குமார் (இணை பொது செயலாளர்), நடராஜன் (துணைத் தலைவர்), ஜோசி லாசர் (செயல் தலைவர்), மூர்த்தி, ஏசுதாஸ், ராமகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரும், வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, சி.எப்.எல்.யு., தொழிற்சங்கம் சார்பில் ஈஸ்வரன், டி.எப்.எல்.யூ.,வில் மகேஸ்வரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். கேன்டீன் நிர்வாக குழுவில், ஐ.என்.டி.யு.சி., யை சேர்ந்த ராஜ்குமார், ரவிகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனை இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
