கோவை : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து இந்தியா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து இந்தியா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ். இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றி கொண்டு, மற்றொருவரை அழைத்து செல்ல பாடி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவரை தகாத வார்த்தைகள் திட்டி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பயணியின் அவமானப்படுத்தப்பட்டதால், கார் ஓட்டுநர் ராஜேஷ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனில் இருந்த பதிவுகளின் அடிப்படையில், ராஜேஷின் தற்கொலைக்குக் காவல் ஆய்வாளர் தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு கோவை மாவட்ட அனைத்து இந்தியா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜேஷ் மரணம் போல் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்கக்கூடாது. இந்த கடந்த ஆண்டு மட்டும் 3 பேர் போலீசார் கெடுபிடியால் தற்கொலை செய்து உள்ளனர்.
எனவே, கோவை மாவட்ட அனைத்து இந்தியா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர், இது போல நடக்க கூடாதெனவும், இதனைக் கண்டித்தும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.