குன்னூர் சாலையில் உலா வரும் காட்டெருமையால் பரபரப்பு

நீலகிரி : குன்னூர் பேருந்து நிலைய முக்கிய சாலையில் இன்று காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

நீலகிரி : குன்னூர் பேருந்து நிலைய முக்கிய சாலையில் இன்று காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.



நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றி வனப்பகுதிகள் அதிகமாகக் காணப்படுவதால், காட்டெருமை, சிறுத்தை, புலி, கடமான், புள்ளிமான், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கு வசித்து வருகின்றன. இந்நிலையில், சமீப காலமாக, வனப்பகுதியையொட்டி அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகள் கட்டுவதாலும், மின்வேலி அமைப்பதாலும், வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரையொட்டிய கிராமங்களுக்கு வருகின்றன. 

அப்போது, கிராமப்புறங்களில் விளைநிலங்களில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட், அவரை உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதற்கு உணவாகக் கிடைக்கிறது. இதனால், வனப்பகுதியில் இருந்து வரும் வனவிலங்குகள், மீண்டும் வனப்பகுதிக்கு திரும்புவது இல்லை. தேயிலை தோட்டங்களிலும், விவசாய நிலங்களிலும், மக்கள் குடியிருக்கும் பகுதியிலும் சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில், பேருந்து நிலைய சாலை ,மற்றும் மவுண்ட்ரோடு பகுதியில் இன்று காலை திடீரென உள்ளேப் புகுந்த காட்டெருமையைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

பின்னர் இந்த காட்டெருமை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள சோலைக்குள் புகுந்தது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டெருமையைத் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...