கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் 200 போர்வைகள் வழங்கப்பட்டன.
கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் 200 போர்வைகள் வழங்கப்பட்டன.
உலகம் முழுவதும் இன்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்றது. அதேபோல, கோவை அரசு மருத்துவமனையிலும் உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த தினத்தையொட்டி எல்.ஐ.சி. இன்ஷூரன்ஸ் நிறுவனம் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 போர்வைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய நோய்தான் எனவும் நோயாளிகளிடம் கூறி நம்பிக்கை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் மண்டல பொறுப்பாளர் ஃபஸ்லூல் ரெஹ்மான், மருத்துவமனையின் இருப்பிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் இன்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்றது. அதேபோல, கோவை அரசு மருத்துவமனையிலும் உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த தினத்தையொட்டி எல்.ஐ.சி. இன்ஷூரன்ஸ் நிறுவனம் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 போர்வைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய நோய்தான் எனவும் நோயாளிகளிடம் கூறி நம்பிக்கை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் மண்டல பொறுப்பாளர் ஃபஸ்லூல் ரெஹ்மான், மருத்துவமனையின் இருப்பிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.