கோவையில் உழவர் பெருந்தலைவரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்

கோவை : கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா மணிமண்டபத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (பிப்.,06) திறந்து வைக்கிறார்.

கோவை : கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா மணிமண்டபத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (பிப்.,06) திறந்து வைக்கிறார். 

விவசாயிகளுக்காக வாழ்ந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யாவின் சேவைகளை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில் அன்னூர் வட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மணிமண்டபத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கிறார். 

இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். 



மேலும், அனைத்து விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், திரளான விவசாயிகள் பங்கேற்க உள்ளார்கள். தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...