திருப்பூர் : அவசர காலத்திற்கு உதவும் வகையில் திருப்பூரில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் : அவசர காலத்திற்கு உதவும் வகையில் திருப்பூரில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 சார்பில் இந்த பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44-ன் தலைவர் கவிதா ஜெனார்த்தனன் மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116-ன் தலைவர் ஜெனார்த்தன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் மனோகரன், துணை ஆணையர் உமா மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.

இந்த பைக் ஆம்புலன்ஸை திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, 1,000-க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காப்பற்ற இந்த பைக் ஆம்புலன்ஸ் பயன்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

"உயிர்களைக் காக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கு 9842209999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்," என திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44-ன் தலைவர் கவிதா ஜெனார்த்தனன் கூறினார்.

திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 சார்பில் இந்த பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44-ன் தலைவர் கவிதா ஜெனார்த்தனன் மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116-ன் தலைவர் ஜெனார்த்தன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் மனோகரன், துணை ஆணையர் உமா மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.

இந்த பைக் ஆம்புலன்ஸை திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, 1,000-க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காப்பற்ற இந்த பைக் ஆம்புலன்ஸ் பயன்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

"உயிர்களைக் காக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கு 9842209999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்," என திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44-ன் தலைவர் கவிதா ஜெனார்த்தனன் கூறினார்.