திருப்பூர் : மதச்சார்பின்மை பற்றி பேசும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்கை அவமதித்து பேசுவது சரியா..? என திருப்பூரில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் : மதச்சார்பின்மை பற்றி பேசும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்கை அவமதித்து பேசுவது சரியா..? என திருப்பூரில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும் 10-ம் தேதி நடக்கும் பா.ஜ.க., பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவுள்ளார். இந்த நிலையில், பெருமாநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள வாஜ்பாய் திடலினை தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், பெருமாநல்லூரில் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- பிப்ரவரி 10-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடக்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் பிரம்மாண்ட விழாவாக நடைபெறவுள்ளது. மதுரையைப் போலவே இங்கும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வோடு, பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி அளவில் பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்து வரும் பா.ஜ.க.,வை கிண்டலடிப்பவர்களுக்கு, தங்கள் பணிகளால், அவர்களின் கேலிகளை முறியடிப்போம்.

மதச்சார்பின்மை பற்றி பேசும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்கை அவதூறாக விமர்சித்துள்ளார். இதனை கேள்வி கேட்பவர்களை காவி என்கின்றார். ஆனால், உண்மையில் பா.ஜ.க.,தான் மதச்சார்பின்மை பற்றி பேசும் கட்சியாக உள்ளது. 50 வருடமாக ஏழைகளைப் பற்றி சிந்திக்காத ராகுல் காந்தி, திடீரென ஏழைகள் பற்றி சிந்திக்கிறார். அவர் சொல்வது போல இல்லாமல், பா.ஜ.க. அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். அதன்மூலம் இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்க உள்ளோம், எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.,வை சேர்ந்த எஸ்.வி. சேகர், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தன்னை பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு அழைப்பதில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும் 10-ம் தேதி நடக்கும் பா.ஜ.க., பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவுள்ளார். இந்த நிலையில், பெருமாநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள வாஜ்பாய் திடலினை தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், பெருமாநல்லூரில் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- பிப்ரவரி 10-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடக்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் பிரம்மாண்ட விழாவாக நடைபெறவுள்ளது. மதுரையைப் போலவே இங்கும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வோடு, பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி அளவில் பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்து வரும் பா.ஜ.க.,வை கிண்டலடிப்பவர்களுக்கு, தங்கள் பணிகளால், அவர்களின் கேலிகளை முறியடிப்போம்.

மதச்சார்பின்மை பற்றி பேசும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்கை அவதூறாக விமர்சித்துள்ளார். இதனை கேள்வி கேட்பவர்களை காவி என்கின்றார். ஆனால், உண்மையில் பா.ஜ.க.,தான் மதச்சார்பின்மை பற்றி பேசும் கட்சியாக உள்ளது. 50 வருடமாக ஏழைகளைப் பற்றி சிந்திக்காத ராகுல் காந்தி, திடீரென ஏழைகள் பற்றி சிந்திக்கிறார். அவர் சொல்வது போல இல்லாமல், பா.ஜ.க. அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். அதன்மூலம் இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்க உள்ளோம், எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.,வை சேர்ந்த எஸ்.வி. சேகர், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தன்னை பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு அழைப்பதில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.