கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 8, 15, 22 ஆகிய தேதிகளில் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் 8, 15, 22 ஆகிய தேதிகளில் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலை அளிப்பார், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் நடைபெறும். இந்த வகுப்புகள் வரும் 8, 15, 22 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறவுள்ளன. இதில், படிக்காதவர் தொடங்கி , அனைத்து வித படிப்பு தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலை அளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்வர். இதில் பங்கேற்று பலனடைய எவ்வித கட்டணமும் கிடையாது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடர்ந்து அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை புதுப்பித்துக் கொள்ளலாம், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலை அளிப்பார், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் நடைபெறும். இந்த வகுப்புகள் வரும் 8, 15, 22 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறவுள்ளன. இதில், படிக்காதவர் தொடங்கி , அனைத்து வித படிப்பு தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலை அளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்வர். இதில் பங்கேற்று பலனடைய எவ்வித கட்டணமும் கிடையாது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடர்ந்து அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை புதுப்பித்துக் கொள்ளலாம், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.